டெல்லி

ச்சநீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் சொத்து விவரம் சேகரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையொட்டி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்து 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.  இந்தச் சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்த வழக்கில், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல் துறை. வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

அதிகாரிகள் சார்பில் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர்.