வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களுக்குப் பிறகு 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் பணி தீவிரமடைந்துள்ளது.

முண்டகைக்கு அருகே படவெட்டிக்குன்னு எனும் இடத்தில் நிலச்சரிவில் சிக்கித் தவித்து வந்த 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சிறிய ரக ஹெலிகாப்டர் மூலம் அவர்களை ராணுவத்தினர் மீட்டுள்ள நிலையில் மேலும் சிலர் உயிருடன் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.