யநாடு

துவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி 276 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கையில், மேப்பாடி சூரல்மலை ஆகிய மலைப்பகுதிகளில் கடந்த திங்களன்று நள்ளிரவில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜூலை 31ந் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 276 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இன்று ஒரே நாளில் 98 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. மீட்கப்படும் சடலங்கள் சூரல்மலை பள்ளிகளில் ப்ரீசரில் வரிசையாக வைக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகிறது. பல சடலங்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு சிதைந்து காணப்படுகின்றன.

ஏராளமானோர் மருத்துவமனையில் குவிந்து அவர்கள் தங்களது உறவினர்களை காணாமல் நிற்பது காண்போர் நெஞ்சை கரைய செய்கிறது.
இதற்கிடையில் கேரளாவில் சனிக்கிழமை வரை கனமழை தொடரும் என அறவிக்கப்பட்டுள்ளது. கோழிக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்ட, ஆலப்புழ, கோட்டயம் மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு பாதிப்புகளை கண்டறியவும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தி நாளை காலை வயநாடு மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனர். நாளை காலை 11.30 மணியளவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இது மக்களை மேலும் கவலையில் ஆழ்த்தி உள்ளது  மாநில அரசு இந்த பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. died, again landside, caution