வுசா

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்ட சிறையில் இருந்து அம்மாநில  முதல்வருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.

தற்போது ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் பஜ்ன்லாலுக்கு தவுசா மாவட்டத்தில் உள்ள ஷியாலாவாஸ் சிறையில் இருந்து கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

உதவி காவல் சூப்பிரெண்டு லால்சோட் லோகேஷ் சோனவால்,

”நேற்று காலை  7.30 மணியளவில் தவுசா எஸ்.பி. ரஞ்சிதா சர்மாவுக்கு ஜெய்ப்பூரில் உள்ள உயரதிகாரிகளிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.  அதிகாரிகள் ஷியாலாவாஸ் சிறையில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்து நபர் ஒருவர் பேசியுள்ளார் எனத் தெரிவித்தனர்.

இந்த மிரட்டல் பற்றி விசாரிக்கும்படி தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். முதல்வருக்கு கொலை மிரட்டல் விடப்பட்ட சம்பவம் தெரிய வந்ததும், டி.ஐ.ஜி., உள்ளூர் காவல் அதிகாரி உள்பட உயரதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்றனர். சிறை அதிகாரிகளுடன் சேர்ந்து தேடுதல் பணி நடந்தது.

அப்போது சிறையில் மறைவான பகுதியில், 9 மொபைல் போன்கள் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்து அவை தோண்டி எடுக்கப்பட்டு சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.  கொலை மிரட்டல் விடுத்த நபர் கண்டறியப்பட்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, அந்த நபரின் பெயரை வெளியிட முடியாது என போலீஸ் சூப்பிரெண்டு லால்சோட் கூறியுள்ளார். டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த அந்த நபர், 376-வது பிரிவின் கீழ் தண்டனையை அனுபவித்து வருகிறார் ”

என்று கூறியுள்ளார்.