பாட்னா

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் விரைவில் தனது புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளது குறித்து அறிவித்துள்ளார்.

தற்போது பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் 2025 ஆம்ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்ஹையொட்டி புதிய அரசியல் கட்சி பற்றிய முடிவை தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் வெளியிட்டு உள்ளார்.  அவருடைய இந்த அறிவிப்பின் மூலம் பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு புதிய கட்சியை தொடங்கு முக்கிய நோக்கம் எனத் தெரிய வந்துள்ளது..

இது குறித்து பாட்னா நகரில் பாபு சபாகார் பகுதியில் நடந்த கூட்டத்தில் பிரஷாந்த் கிஷோர்,

”அக்டோபர் 2-ந்தேதி ஜன் சுராஜ் கட்சிக்கான அடிக்கல் நாட்டப்படும். கட்சியில் ஒரு லட்சம் பேர் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் பணியாளர்களாக இருப்பார்கள் நான் கட்சிக்கு தலைமையேற்க போவதில்லை கட்சியின் தலைவர்கள் எல்லோரும், அவர்களுடைய சொந்த சட்டசபை தொகுதிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  அடுத்த ஆண்டு பீகாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம்”

என்று கூறி உள்ளார்

கூட்டத்தின் போது 3 முக்கிய பிரமுகர்கள் அவருக்கு ஆதரவை தெரிவித்து இணைந்துள்ளனர். முன்னாள் முதல்வர் கற்பூரி தாகுரின் பேத்தியான டாக்டர் ஜாக்ரிதி, சமீபத்திய மக்களவை தேர்தலில் பக்சார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஆனந்த் மிஸ்ரா மற்றும் பேராசிரியர் ராம்பாலி சிங் சந்திரவன்ஷி ஆகியோர் கட்சியில் உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்டனர்.

பிரசாந்த் கிஷோரின் அரசியல் கட்சி தொடக்கத்திற்காக தனியாக 8 மாநில அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட்டு அதில், கட்சியின் தலைமை, கொள்கை மற்றும் கட்சியின் முன்னுரிமைகள் உள்ளிட்டவை பற்றி அனைத்து அதிகாரிகளுடன் இணைந்து முடிவு செய்யப்பட உள்ளது.  இதில் ஒரு பகுதியாக, நேற்று முதல் கூட்டம் பாட்னாவில் நடந்து முடிந்துள்ளது. ஆகஸ்டு 4-ந்தேதி நடைபெறும் அடுத்த கூட்டத்தில் கட்சியின் இளம் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.