டெல்லி

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள 2 மண்டபங்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,-

”குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் இல்லமாக இருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகை தேசத்தின் சின்னமாகவும், மக்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகவும் உள்ளது. எளிதில் இதை மக்கள் அணுகும் வகையில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடியரசுத் தலைவர் மாளிகையின் சுற்றுப்புறத்தை இந்திய கலாச்சார விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்க ஒரு நிலையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையொட்டி மாளிகையின் முக்கியமான இரண்டு அரங்குகளான ‘தர்பார் ஹால்’ மற்றும் ‘அசோக் ஹால்’ ஆகியவற்றை முறையே ‘கணதந்திர மண்டபம்’ மற்றும் ‘அசோக் மண்டபம்’ என மறுபெயரிடுவதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மகிழ்ச்சியடைகிறார்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.