டெல்லி

த்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

கடந்த மே மாதம் ந்டந்த இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு தொடர்பாக முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பாக மறுதேர்வு நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையில், மறுதேர்வு நடத்தக்கோரிய அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது  மேலும் இந்த கல்வி ஆண்டில் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் கூறியது.  இது நாட்டில் பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,

”நீட் தேர்வு விவகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் அராஜகம் மற்றும் நாட்டில் அமைதியின்மையை உருவாக்க முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் சுப்ரீம் கோட்டு தீர்ப்பின் மூலமாக உண்மை வென்றுள்ளது. தேர்வின் புனிதத்தன்மை மீறப்பட்டதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை தவறாக வழி நடத்தியதற்காக எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும், கோர்ட்டு உத்தரவின் படி நீட் இளங்கலை தேர்வுக்கான இறுதி முடிவுகள் 2 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்’

என்று தெரிவித்துள்ளார்.