ம்ரோஹா

த்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா அருகே சரக்கு ரயிலி 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே சண்டீகர் திப்ரூகர் விரைவு ரயில் மூன்று நாட்களுக்கு முன் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு சரிந்தன. விபத்தில் நான்கு பயணிகள் உயிரிழது 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து  டெல்லிக்கு சரக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அம்ரோஹா அருகே சென்ற போது இந்த ரயில் திடீரென தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

விபத்தில் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டு தண்டாவளத்தில் இருந்து சரிந்தன. ரயிலின் அருகே பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த ரயில்வே அதிகாரிகள்  மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இந்த சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில்  டெல்லி-லக்னோ இடையிலான ரயில் பாதை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்த ரயிலின் பெட்டிகளில் இரண்டு பெட்டிகள் மட்டுமே வேதிப் பொருட்களை ஏற்றிச் சென்றதாகவும் மீதமுள்ள பெட்டிகள் காலியாக இருந்ததாகவும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் விபத்து குறித்து காங்கிரஸ் கட்சி,

”தொடர்ச்சியாக மோடி தலைமையிலான ஆட்சியில் சில நாட்களுக்கு ஒருமுறைதான் ரயில் விபத்துகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது அது போன்ற செய்திகள் தினமும் வந்துகொண்டே இருக்கின்றன. மத்திய அரசின் அலட்சியத்தால், நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் ரயில்வே சீரழிந்துள்ளது.”

எனக் குற்றம் சாட்டியுள்ளது.