கோவா: கோவாவில் இருந்து தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் சரக்கு பெட்டக சரக்கு கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மீட்பு பணிகளில் இந்திய கடலோர காவல்படை  ஈடுபட்டு ள்ளது.

இந்த தீ விபத்தில் ஒருவர் பலியானதாகவும், மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவா அருகே சரக்கு கப்பலில்  சார்ட் சர்கியூட் காரணமாக  வணிக கப்பலின் முன்புற செக்ஷனில் தீப்பற்றியுள்ளது. கோவாவில் இருந்து தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து தகவல் அறிந்ததும், தீயை அணைக்கும் பணியில், இரண்டு இந்திய கடலோர காவல்படை கப்பல்கள்   கோவாவிலிருந்து அனுப்பப்பட்டன.  அவை தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இந்த ப யங்கர தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விசாரணையில் இந்த சரக்கு கப்பல்  குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகம் நோக்கி ஏராளமான பொருட்கள் மற்றும்  21 பணியாளர்களுடன்   கோவாவின் தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் நேற்று மதியம் வந்துகொண்டிருந்தபோது,  கப்பலில் ஏற்பட்ட சார்ட் சர்கியூட் காரணமாக கப்பலின் முன்புறத்தில் தீப்பற்றி யுள்ளது. தீயை அணைக்கும் பணியில், . கப்பல் பணியாளர்கள்  ஈடுபட்டும் பயனளிக்கவில்லை. இதையடுத்து கடலோர காவல்படையினல் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு பணிகள் நடந்து வரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.