அதிக பிலிம்பேர் விருது : நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சாய் பல்லவி

இதுவரை 6 முறை பிலிம்பேர் விருது பெற்ற நடிகை சாய் பல்லவி நடிகை நயன்தாராவை முந்தியுள்ளார்.

தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்ன்ணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவியின் நடிப்பு மற்றும் நடனத்திற்காக தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சாய் பல்லவியின் புதியவரலாற்று சாதனையின்படி, அதிகமுறை பிலிம்பேர் விருது வென்ற தென்னிந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான “பிரேமம்” மூலம் அறிமுகமான சாய் பல்லவி அப்படத்தில் ஆசிரியராக இவரது நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது., இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை “பிரேமம்” மூலம் வென்றார்.

பிறகு சாய் பல்லவி பிடா, லவ் ஸ்டோரி, ஷியாம் சிங்கா ராய் (விமர்சகர்கள்), விரத பர்வம் (விமர்சகர்கள்) மற்றும் கார்கி ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

இவர் கலி, மாரி 2, ஷியாம் சிங்கா ராய், விரத பர்வம் ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.  இதன்படி 10 முறை பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட சாய் பல்லவி 6 முறை விருதை வென்றுள்ளார்.

சாய்பல்லவி இதன் முலம்  நயன்தாராவை முந்தியுள்ளார். இதுவரை நயன்தாரா 14 முறை பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டநிலையில், 5 முறை பிலிம்பேர் விருது வென்றுள்ளார். ஆனால் சாய் பல்லவி 6 முறை பிலிம்பேர் விருது பெற்று நயன்தாராவை  பின்னுக்கு தள்ளி உள்ளார்