குணா

த்திய பிரதேச பாஜக எம் எல் ஏ பன்னாலால் ஷக்யா மாணவர்களை பஞ்சர் கடை வைத்து பிழைக்கலாம் என அறிவுரை கூறி உள்ளார்.

இந்தியா முழுவதும் உயா்கல்வியை மேம்படுத்தும் வகையில் பிரதமா் சிறப்புக் கல்லூரி (பி எம் காலேஜ் ஆப் எக்சலன்ஸ்) என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த புதிய கல்லூரியின் திறப்பு விழா மத்தியபிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் நடந்தது.

விழாவில் அந்த தொகுதியின் பாஜக எம் எல் ஏ பன்னாலால் ஷக்யா பங்கேற்று,

“இங்கு பிரதமா் சிறப்புக் கல்லூரியைத் தொடங்கியுள்ளோம். மாணவா்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றை மட்டும் தெளிவாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கல்லூரியில் படித்து கிடைக்கும் பட்டத்தால் ஒன்றும் நடந்துவிட போவதில்லை. இதற்கு பதிலாக மோட்டாா் சைக்கிளுக்கு பஞ்சா் பாா்க்கும் கடை வைத்தால் உங்கள் வாழ்க்கையை நடத்த முடியும்”

என்று உரையாற்றி உள்ளார்.

இதையொட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

“முன்னதாக, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க பக்கோடா விற்க கூறினார் பிரதமர் மோடி. இப்போது அவரது எம் எல் ஏக்கள் கல்லூரி பட்டங்களை பயனற்றவை என்றும், பஞ்சர்கடை திறக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு சொல்கிறார்கள்”

என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.