சென்னை

தொடர்ந்து 3 ஆம் வாரமாக இன்றும் சென்னை அண்ணா நகரில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடந்துள்ளது.

காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ (மகிழ்ச்சி தெரு) என்ற கொண்டாட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை அண்ணாநகரில் தொடர்ந்து 3-வது வாரமாக இன்று ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் அனைவரையும் கவரும் வகையில் பம்பரம் விடுதல், சைக்கிளிங், ஸ்கேட்டிங், வில்வித்தை, பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று இருந்தன.

மேலும் டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளை ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் விளையாடியும் அங்கு இசைக்கப்பட்ட பாடல்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் உற்சாகமாக நடனமாடியும் கொண்டாடினர்.