டெல்லி

ன்று பிரதமர் மோடி மத்திய பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

மத்திய அரசு 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இது மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்த மாதம் 2024-25 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாதார வல்லுநர்களுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன், பொருளாதார வல்லுநர்கள் கலந்து கொண்டுள்ளனர்.