பாட்னா

பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்ட் நடைபெற்ற நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக பல புகார்கள் எழுந்தன.  உச்சநீதிமன்றத்தில் வினாத்தாள் கசிவு,  கருணை மதிப்பெண்,  67 பேருக்கு முழு மதிப்பெண்கள்,  நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள்,  ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது,  ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பீகாரில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டதால் சிபிஜ விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.  நேற்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பாட்னாவில் இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தேர்வுக்கு முன்னர் குறிப்பிட்ட மாணவர்களுக்கு வினாத்தாள் மற்றும் அவற்றிற்கான விடைகளை இருவரும் அளித்ததாக சிபிஐ தெரிவித்தது. இதனையடுத்து ஜார்கண்டைச் சேர்ந்த இருவரை சிபிஐ கைது செய்துள்ளது. நீட் முறைகேடு விவகாரத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.