புதுச்சேரி

ரசுப் பள்ளி செயல்படும் நேரத்தை புதுச்சேரி அர்சு மாற்றியுள்ளது.

தற்போது புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இங்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் அரசுப் பள்ளிகளிள் செயல்படும் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதாவது காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு உணவு இடைவேளை விடப்படுகிறது. பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன. இதற்கிடையில் இருமுறை 10 நிமிடங்கள் இடைவேளை விடப்படுகிறது.

வரும் 15 ஆம் தேதி இந்த புதிய நடைமுறை காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்முலம் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கேற்ப 8 பாடவேளைகளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.