ம்மு

காஷ்மீர் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இமலமலையில் தெற்கு காஷ்மீர் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பனி உறைந்து சிவலிங்க வடிவத்தில் காணப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் இயற்கையாக உருவாகும் இந்த பனி லிங்கத்தை தரிசிக்க யாத்திரை செல்வது வழக்கம்.

ஜூன் 25 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்கி இதுவரை 1.50 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். நேற்ற) அதிகாலை, ஜம்முவில் இருந்து 5,876 பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டனர். தற்போது கனமழை பெய்துவரும் நிலையில், 245 வாகனங்களில் 1,118 பெண்கள், 18 குழந்தைகள் உட்பட மொத்தம் 5, 876 பேர் கிளம்பிச் சென்றனர்.

இதில் 3,759 பக்தர்கள் பாரம்பரிய பாதையான பஹல்காம் வழியாக அமர்நாத் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் மற்றொருரு பாதையான பால்டால் வழியாக 2, 117 பக்தர்கள் செல்லவிருந்தனர். ஆனால் கனமழை காரணமாக இவர்கள் இடையில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.