டெல்லி

பிரதமர் மோடியிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கு கூடுதல் நிதி அளிக்குமாறி கேட்டுல்ளார்.

இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போத் ஆந்திர மாநிலம் தொடர்பான பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிய வந்துள்ளது.

சந்திரபாபு நாயுடு போலாவரம், அமராவதி தலைநகர் கட்டமைப்பு பணி குறித்து தெளிவாக எடுத்துக் கூறியதுடன் ஆந்திர மாநிலத்துக்கு கூடுதல் நிதி சலுகைகள் மற்றும் வரி சலுகைகளை கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே வர்த்தகத்துறை அமைசர் பியூஷ் கோயலை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். தற்போது மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச உள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வருவதால் அவருடைய கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.