டெல்லி

னி மாநிலங்களவையில் பிஜு ஜனதாதள எம் பி க்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என அக்கட்சி தலைவர் நவீன் பட்நாயக் கூறி உள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் இடையிலான கூட்டணி முறிந்து இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.  ஒடிசா சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது.

ஒடிசாவின் அப்போதைய ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளம் வெறும் 51 இடக்களில் மட்டும் வெற்றி பெற்ரு ஆட்சியை இழந்தது.  அதே வேளையில் மக்களவை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் 12 இட்ங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இன்று பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர்  நவீன் பட்நாயக் தனது கட்சியின்  மாநிலங்களவை  எம் பிக்களுடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளர். அப்போது அந்த கூட்டத்தில் நவீன் பட்நாயக் பாஜகவுக்கு மாநிலங்களவையில் ஆதரவு அளிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.  இனி பிஜு ஜனதா தளம் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக மாநிலங்களவையில் இயங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்ட்ள்ளார்.