டெல்லி

ரும் 26 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற மக்களவைக்கு புதிய சபாநாயகரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது.

நடந்து  முடிந்த 18 ஆவது மக்களவை தேர்தலில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை இடங்களான 272 இடங்களை பா.ஜனதா பெற்மல் 240 இடங்களை மட்டுமே பெற்றது.  எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்குதேசம் கட்சியின் 16 எம்.பி.க்கள் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் 12 எம்.பி.க்கள் மற்றும் சில கட்சி எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

மோடி பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.  தவிர 2 பெரிய கூட்டணி கட்சிகளுக்கும் தலா 2 மத்திய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. வரும் 24 ஆம் தேதி 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி ஜூலை 3-ந் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் 2 நாட்களும் புதிய எம்.பி.க்களின் பதவியேற்பு நடக்கிறது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு புதிய எம்.பி.க்கள் பதவியேற்புக்காக தற்காலிக சபாநாயகரை நியமித்து இவரது தலைமையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொள்வார்கள். பிறகு 18-வது மக்களவைக்கான சபாநாயகர் தேர்தலை தற்காலிக சபாநாயகர் நடத்துவார். வரும் 26 ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்தல் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது.