புவனேஸ்வர்,

ரும் 12 ஆம் தேதிக்கு ஒடிசா மாநிலத்தில் பாஜக பதவியேற்பு விழா மாற்றப்பட்டு:ள்ளது.

பாஜக ஒடிசாவில் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மொத்தம் 147 தொகுதிகள் கொண்ட ஒடிசாவில், பா.ஜ.க. 78 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றதையடுத்து ஆட்சி அமைக்கும் பணிகளை தொடங்கியது. புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

ஜூன் 10-ம் தேதி ஒடிசாவின் முதல் பா.ஜ.க. அரசு பதவியேற்கும் என என பிரதமர் மோடி தனது பிரசாரத்தின் போதே கூறியிருந்தார். நேற்று பா.ஜ.க. மாநில தலைவர் மன்மோகன் சமனும் நேற்று அதனை உறுதி செய்தார். ஆயினும் கடைசி நேரத்தில் பதவியேற்பு விழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் முக்கிய தலைவர்களான ஜதின் மொகந்தி, விஜய்பால் சிங் தோமர் ஆகியோர்  பதவியேற்பு விழா 10-ம் தேதியில் இருந்து 12-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருப்பதாக இன்று தெரிவித்தனர். மீண்டும் மத்தியில்  பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில், பதவியேற்பு விழா, எம்.பி.க்களுடன் சந்திப்பு என பிரதமர் மோடி பிசியாக இருப்பதால் ஒடிசா பதவியேற்பு தேதி மாற்றப்பட்டிருப்பதாக கூறினர். ப்படுகிறது.

ஒடிசாவின் புதிய முதல்வர் யார்? என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. பாஜக தலைமை யாருடைய பெயரையும் \ அறிவிக்கவில்லை. ஆயினும் மூத்த பா.ஜ.க. தலைவரும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுமான சுரேஷ் பூஜாரி டெல்லிக்கு சென்றுள்தால், அவர் முதல்வர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கலாம் என பேச்சு நிலவுகிறது.