டெல்லி

ன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 17 ஆவது மக்களவையை கலைக்க உத்தரவிட்டுள்ள்ளார்.

நாட்டில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

அதாவது பா.ஜ.க. 240 தொகுதிகளையும். கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. என்வே பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.  வருகிற 8-ம் தேதி மாலை 3-வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் கூடி 17 ஆவது மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்தது. ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்து மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த தீர்மானத்தையும் மேலும் தனது பதவி மற்றும் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தையு, வழங்கினார்.

எனவே குயரசுத் தலைவர் திரவுபதி முர்ம் அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 17 ஆவது மக்களவையை  கலைத்து உத்தரவிட்டுள்ளார் என ராஷ்டிரபதி பவன் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.