டெல்லி

டெல்லி நீதிமன்றம் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துள்ள்து.

கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  அவருக்கு உச்சநீதிம்ன்றம் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, ஜூன் 1-ந் தேதிவரை இடைக்கால ஜாமீன் அளித்தது.

கெஜ்ரிவால் இந்த ஜாமீன் முடிந்து கடந்த 2-ம் தேதி திகார் சிறையில் மீண்டும்  சரணடைந்தார். கெஜ்ரிவால், மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டி இருப்பதால் மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்றுகெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, நீதிமன்ற காவலில் உள்ளதால் திகார் சிறை அதிகாரிகள் கெஜ்ரிவாலின் மருத்துவ தேவையை கவனித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.  மேலும் அவரது நீதிமன்ற காவலை வரும் 19ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.