டெல்லி

பாஜக கூட்டணி முதல்வர்களின் கூட்டம் வரும் 7 ஆம் தேதி நடைபெற் உள்ளது.

நாட்டில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ.க. மட்டும் 240 தொகுதிகளை கைப்பற்றியது.

மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றியதால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 7 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், கூட்டணியில் உள்ள முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தி எந்தெந்த மாநிலங்களில் பின்னடைவு, அதன் காரணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.