டெல்லி

டந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தை 3 வெற்றிகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே அடிக்கடி முன்னிலை நிலவரம் மாறி மாறி உள்ளது.  மதிய ந்லவரப்படி பாஜக கூட்டணி 290 இடங்களிலும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்த முன்னிலை மற்றும் வெற்றி விவரங்களில் கவனிக்க வைத்த 3 வெற்றிகள் குறித்த விவரங்கள் வருமாறு:

காலிஸ்தான் அபிமானியான அம்ரித் பால் சிங், அசாம் மாநிலத்தில் சிறையில் இருக்கும் நிலையில் பஞ்சாபின் காதோர் சாஹிப் தொகுதியில் வெற்றியின் விளிம்பில் உள்ளார்

UAPA வழக்கில் 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் எஞ்சினியர் ரஷீத், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ளார்

மறைந்த பிரத்மர் இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங், பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் தொகுதியில் சுயேச்சையாக வெற்றி முகத்தில் உள்ளார்.