டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ‘295 தொகுதிகளில் நாங்கள் (இண்டியா கூட்டணி)  வெல்வோம் என காங்கிரஸ் கட்சிளின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உறுதிப்பட  தெரிவித்துள்ளார்.

18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டமாக கடந்த 44 நாள்களாக முடிந்துள்ளது. இதையொட்டு நாளை (ஜூன் 4ந்தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றையே தினமே மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிய வரும்.

இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகளில்,  பாஜகவை வெற்றி பெறும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.  ABP – C Voter வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, 353 முதல் 383 தொகுதிகள் வரை பாஜக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், 152 முதல் 183 தொகுதிகள் வரை மட்டுமே பெறும் என கூறப்பட்டுள்ளது. INDIA TODAY( Axis MyIndia) வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி, 361 முதல் 401 தொகுதிகள் வரை பாஜக கூட்டணி வெற்றி அடையும் என சொல்லப்பட்டுள்ளது. 353 முதல் 368 தொகுதிகள் வரையில் பாஜக கூட்டணி வெற்றி பெறலாம் என Republic செய்தி நிறுவனம் கணித்துள்ளது. ஆனால், இதை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்து வருடிகின்றன.

இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி , “இது கருத்துக் கணிப்பு அல்ல. மோடி ஊடகத்தின் கருத்துக் கணிப்பு. இது அவரது கற்பனைகள் நிறைந்த கருத்துக் கணிப்பு” என்றார்.

அப்போது செய்தியாளர்கள் எத்தனை இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும் என  கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி,  “சித்து மூஸ் வாலாவின் 295 பாடலை கேட்டிருக்கிறீர்களா? 295” என பதில் அளித்து சென்றார்.

இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சி 74 தொகுதிகளை கைப்பற்றும் என ABP – C Voter கணித்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தியா கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றியுள்ளது. உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 45.3 சதவிகித வாக்குகளை பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் 4 முதல் 6 இடங்களையும் குஜராத்தில் 25 முதல் 26 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் 4 முதல் 6 இடங்களையும் கர்நாடாகவில் 23 முதல் 25 இடங்களையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.