கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 7வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது.  பல இடங்களில்  கட்சியினர்களி டையே வன்முறை ஏற்பட்டு உள்ளதுடன், வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதடப்படுத்தப்பட்டு தண்ணீரில் தூக்கி வீசிய சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. மேலும்,  போலீசார் உதவியுடன் மம்தா கட்சியினர் பொதுமக்கள் மற்றும் மாற்று கட்சியினரை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை காலை 9 மணி வரை தேர்தல் ஆணையத்துக்கு 715 புகார்கள் வந்துள்ளன. சிபிஎம் 46 புகார்களையும், பாஜக 25 புகார்களையும், திரிணாமுல் 6 புகார்களையும் அளித்துள்ளன.

சமீப காலமாக மேற்குவங்க மாநிலம் வன்முறை மிகுந்த மாநிலமாக மாறி வருகிறது. மம்தாவின் ஆட்சி ஒருதலைப்பட்சமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், நடைபெற்று வரும் சம்பவங்கள் அதை உறுதிசெய்கின்றன.

7ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று  மேற்குவங்கம் உள்பட 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளில்,  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், குல்தாய் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 40, 41-ல், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதுமே வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து,  அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் (வாக்காளர் வாக்குப்பதிவு சரிபார்ப்பு) இயந்திரம் ஆகியவை தண்ணீரில் வீசப்பட்டன. ஆனால், இந்த இயந்திரங்கள், பழுது ஏற்பட்டால் மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த கூடுதல் இயந்திரங்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கரில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) கட்சி தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. அங்கு கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதேபோல் கொல்கத்தா உத்தர் தொகுதியில் உள்ள காசிபோரில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பாஜக வேட்பாளர் தபாஸ் ராய்க்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, சந்தேஷ்காலியில் பாஜகவைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களின் வீடுகளுக்கு நேற்று இரவு திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், போலீஸார் சென்று அவர்களை மிரட்டியதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் பல இடங்களில் வாக்களிக்க வந்த பொதுமக்கள் திரினாமுல் கட்சியைச் சேர்ந்த குண்டர்களால் மிரட்டப்படுவதாகவும், இதற்கு மாநில போலீசாரும், அதிகாரிகளும் துணைபோவதாக கடும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

 சந்தேஷ்காலியில் இரண்டு தினமுல் ஆதரவாளர்கள் பாஜகவினரால் லத்திகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாராநகர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக  சிபிஎம் வேட்பாளர் தன்மய் பட்டாச்சார்யா திரிணாமுல் கவுன்சிலருடன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கல்கத்தா தெற்கு பகுதியில்,  திரிணாமுல் தலைவர் அபிஷேக் பானர்ஜி வாக்களித்தார், முடிவுகள் ஆச்சரியமாக இருக்கும் என்கிறார்.

பிக்னிக் கார்டனில் உள்ள வாக்குச் சாவடியில் சிபிஎம் வேட்பாளர் சைரா ஷா ஹலீம் “போலி” முகவரைப் பிடித்தார்

டயமண்ட் ஹார்பர் வாக்குச் சாவடி 245ல் தன்னை வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று பெண் வாக்காளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

டம் டம்: நார்த் டம் டம் பகுதியில் சிபிஎம் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது

கல்கத்தா தெற்கு பா.ஜ.க வேட்பாளர் தேபாஸ்ரீ சௌத்ரி, பூத்துக்கு வெளியே வாக்காளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலியில் உள்ள சாவடி எண் 40, 41 இல் EVM மற்றும் VVPAT இயந்திரத்தை ஒரு கும்பல் தண்ணீரில் வீசியதாக கூறப்படுகிறது.  ஆனால், வாக்குச் சாவடிகளில் இருந்து எந்த EVM அல்லது VVPAT இயந்திரமும் எடுத்துச் செல்லப்படவில்லை என்றும், தண்ணீரில் வீசப்பட்டவை முன்பதிவு செய்யப்பட்ட EVMகள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கல்கத்தா வடக்கு  காசிபூரில் உள்ள சாவடிக்கு வெளியே திரிணாமுல் ஆதரவாளர்கள் பாஜக வேட்பாளர் தபஸ் ராய்க்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

பங்கூரில் திரிணாமுல் மற்றும் இந்திய மதச்சார்பற்ற படை ஆதரவாளர்களுக்கு இடையே மோதல். போலீசார் மீது செங்கற்கள் வீசப்பட்டன. போலீசார் லத்திகள் மற்றும் தடியடிகளால் பதிலடி கொடுத்தனர்

தேர்தலின் கடைசி நாளில் வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே வன்முறைகள் பதிவாகியுள்ளன

மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை காலை 9 மணி வரை தேர்தல் ஆணையத்துக்கு 715 புகார்கள் வந்துள்ளன. சிபிஎம் 46 புகார்களையும், பாஜக 25 புகார்களையும், திரிணாமுல் 6 புகார்களையும் அளித்துள்ளன