கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு உட்கொண்டதால் உணவு விஷமாகி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று உயிரிழந்தார்.

மூனுபீடிகைக்கு அருகிலுள்ள பெரிஞானத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சனிக்கிழமையன்று உணவை உட்கொண்ட சுமார் 70 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் பெரிஞானம் பகுதியைச் சேர்ந்த உசைபா (50) செவ்வாய்கிழமை அதிகாலை இறந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

யேமன் நாட்டு உணவான “குழிமந்தி” எனப்படும் உணவுடன் வழங்கப்பட்ட மயோனைஸ் உட்கொண்டதே உணவு நச்சுத்தன்மைக்கு காரணம் என்று சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் நடந்த உடனேயே, அதிகாரிகள் உணவகத்திற்கு சீல் வைத்ததாக சம்பவம் நடந்த கைபமங்கலம் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.