Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
தமிழ் நாடு

சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 193 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டது தமிழ்நாடுஅரசு

May 23, 2024
சென்னை:  சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 193 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடுஅரசு  கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அடுத்த பரந்தூரில் பிரமாண்டமான முறையில் பசுமை விமான நிலையம் அமைப்பதில் தமிழ்நாடுஅரசு தீவிரம் காட்டி வருவதால், மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக கையப்படுத்தட இருந்த 193 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சென்னை விமான நிலையம், போக்குவரத்து நெரிசல் மிக்கதாக காணப்படுகிறது. அதனால் பரந்தூர் பகுதியில் பிரமாண்டமான முறையில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடுஅரசு முடுக்கி விட்டுள்ளது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அந்த பகுதியில் வசித்து வரும் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில்,  தற்போதைய சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 193 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தப்படும் என கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு அறிவித்தது.  தற்போது, ​​இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையம் 1,317 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது, இது இந்தியாவின் மற்ற பெரிய விமான நிலையங்களுடன் ஒப்பிடும் போது மிகச்சிறியதாகும்.  அதனால்,  சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த 133 ஏக்கர் நிலமும், சாலை இணைப்புக்காக கூடுதலாக 60 ஏக்கர் நிலமும் தேவை என இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) கூறியுள்ளதாக விமான நிலைய இயக்குனர் டாக்டர் சரத்குமார் 2023ம் ஆண்டு பிப்ரவரியில்  தெரிவித்திருந்தார்.
இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும்,  அடையாறு ஆற்றின் மறுகரையில் சர்வதேச முனையம் மற்றும் சரக்கு முனையம் அமைக்க 306 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசுக்கு AAI கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டது. மேலும், விமான நிலையம் விரிவாக்க பணிகளுக்கு அரசு நிலம் மட்டுமின்றி, தனியார் நிலமும் விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. மேலும்  சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் டிசம்பர் 2024 க்குள் முடிவடையும். இது 35 மில்லியன் பயணிகளின் திறனை அதிகரிக்கும். 55 மில்லியன் பயணிகளைக் கையாள விமான நிலையத்திற்கு கூடுதல் ஏப்ரான் விரிகுடாக்கள் தேவை என கூறப்பபட்டது.
இந்த நிலையில், தற்போது சென்னை விமான நிலையம் விரிவாக்கம் திட்டத்தை தமிழ்நாடு கைவிட்டு உள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது. அதன் காரணமாக,  விமான நிலைய விரிவாக்கம் பணிக்காக கையகப்படுத்தப்பட இருந்த 193 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடுஅரசு  கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சர்வதேவ பசுமை விமான நிலையம் அமைப்பதில்  கவனம் செலுத்துகிறது.
Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LlZPVG1oVXRZeW9J வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..#thiruppugazh
திருப்பம் தரும் திருப்பரங்குன்ற திருப்புகழ்..
திருப்பம் தரும் திருப்பரங்குன்ற திருப்புகழ்..
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..திருத்தணியில் எழிலாகுமா?

#thiruppugazh  #aarupadai​ #murugantemple​ #murugan​ #srilankatemples ​  #temples​ #sivaperuman​ #ilakkiyam​ #tamilgod​ #bhakti​ #sivalayam​ #bhaktisongs​ #palani​ #senthilnathan​ #tiruchendur​ #vetrivel​ #kavadi​ #omsaravanabhava​  #tamilnadu​ #pazhamudhircholai​ #thirupugal​ #tiruchendurmurugan​ #patrikaidotcom #aarupadaiveedu #vaitheeswarankovil #thirupparankundram #pazhamudhircholai #kadamba #walajabad #oothukadu #kathirkaamam
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..திருத்தணியில் எழிலாகுமா? #thiruppugazh #kathirkaamam​
Load More... Subscribe

Post navigation

தமிழ்நாட்டில் இதுவரை 8 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 582 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது! தமிழ்நாடுஅரசு
3ஆண்டுகால திமுக ஆட்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்த சாதனையும் செய்யவில்லை! டாக்டர் ராமதாஸ்

Related Post

தமிழ் நாடு

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்கள்! கொடிஅசைத்து அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின்…

தமிழ் நாடு

விளிம்புநிலை மக்களை கைதூக்கி விடுகிறது திமுக ஆட்சி – தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ் நாடு

சலசலப்பை ஏற்படுத்தி உள்ள பிரவீன் சக்கரவர்த்தி விவகாரம்: ! தனக்கு தெரியாது என்கிறார் செல்வபெருந்தகை…

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer