டெல்லி: தனது தந்தையார் மறைந்த ராஜீவ்காந்தியின் 33வது  நினைவு நாளில் , தனது தந்தையுடன் இருந்த புகைப்படத்தை பதிவிட்டு,  அப்பா என ராஜீவ் காந்தியை நினைவுகூர்த்த ராகுல் நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லி வீர் பூமியில் உள்ள  ராஜீவ் காந்தி நினைவிடத்தில்  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள்   சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி. வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா உள்பட பலர் மரியாதை செலுத்தினார்.

மேலும்,  நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ் காந்தி உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

ராஜீவ் நினைவுதினத்தையொட்டி,  ராகுல்காந்தி, தனது தந்தையுடன் இருந்த பழைய புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பகிர்ந்து உள்ளார். அதில், அப்பா, உங்கள் கனவுகள், என் கனவுகள், உங்கள் அபிலாஷைகள், என் பொறுப்புகள். உங்கள் நினைவுகள், இன்றும், எப்போதும், எப்போதும் என் இதயத்தில் இருக்கும்” என்று  பதிவிட்டுள்ளார்.

இன்று ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள்: டெல்லி நினைவிடத்தில் சோனியா, ராகுல் உள்பட தலைவர்கள் மரியாதை…

 ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள்: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஊர்வலமாக சென்று பூந்தமல்லி நினைவிடத்தில் பேரணியாக சென்று  மரியாதை