அமராவதி, மகாராஷ்டிரா
ராகுல் காந்தி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி,
“இந்திய அரசியலமைப்பை உலகில் எந்த சக்தியாலும் மாற்ற முடியாது. தனது 22 தொழிலதிபர் நண்பர்களுக்கு மட்டுமே மோடி உதவி செய்து அவர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்தார். ர் மோடியின் 10 ஆண்டுக்கால ஆட்சியில் 22-25 பேர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியா கூட்டணி கோடிக்கணக்கான ‘லட்சாதிபதிகளை’ உருவாக்கும். எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், நடந்து வரும் மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில் அளித்த பல்வேறு வாக்குறுதிகளில் மகாலட்சுமி திட்டம் மற்றும் தொழிற்பயிற்சிக்கான உரிமை ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளது.
அதன்படி ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மகாலட்சுமி திட்டம், பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் ஓராண்டுக் காலப் பயிற்சி பெற்று அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தொழிற்பயிற்சி உரிமை. நாட்டின் முகத்தை மாற்றி கோடிக்கணக்கான “லட்சாதிபதிகளை” உருவாக்கும்.
எல்லாவற்றிலும் முதன்மையாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக சாத்வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
மேலும் விவசாயிகளின் பயிர்க்கடன்களை எப்போது தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது குறித்து ஆணையம் அமைக்கப்படும். இந்தியா கூட்டணி அரசு விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும். நமது இந்தியா கூட்டணி அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறது, ஆனால் அதேசமயம் மோடி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் தீவிரம் காட்டுகின்றன. ”
என்று கூறினார்.