டாநகர்

நாளை அருணாசலப் பிரதேசத்தின் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது;

நாடெங்கும் கடந்த 19 ஆம் தேதி முதல் 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் ஏற்கனவே கடந்த 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது  இதில் அருணாசல பிரதேசத்தில் கடந்த 19-ந்தேதி நடந்த நாடாளுமன்ற முதற்கட்டத் தேர்தலுடன், சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

இந்த வாக்குப்பதிவின் போது அருணாசலப் பிரதேசத்தில் சில வாக்குச்சாவடிகளில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இதைத் தவிர சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேதமடைந்திருந்தன.

இதில்  8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலைச் செல்லாது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்ததுடன் அந்த வாக்குச்சாவடிகளில் நாளை (புதன்கிழமை) காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் எனவும் அறிவித்து உள்ளது.