சென்னை

ன்று சட்டசபையில் தொகுதி மறுவரையறை செய்வதை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. 

 

 

நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.  ஆளுநர் தனது உரையைப் படிக்க மறுத்ததும் அவையில் இருந்து வெளியேறியதும் அரசியல் உலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  நேற்று ஆளுநர் உரைக்கு  நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் தொடங்கி நடைபெற்றது.

இன்று தமிழக சட்டசபையில் இரு தனித்தீர்மானங்கள் கொண்டுவரப்பட உள்ளன.  அவற்றில் ஒன்றாக ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தித் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.இந்தத் தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிகிறார்.

அடுத்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்வதை எதிர்த்து தனித்தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.  இந்தத் தனித்தீர்மானத்தையும் முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் முன்மொழிகிறார். 

[youtube-feed feed=1]