சென்னை

ன்று கோயம்பேடு அங்காடியில் தக்காளி விலை ரூ.5 குறைந்துள்ளது.

தொடர்ந்து தமிழகத்தில் உச்சத்திலிருந்து வந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே படிப்படியாகக் குறைந்து வருகிறது. சில்லரை விற்பனை கடைகளில் கடந்த மாதம் தக்காளி ஒரு கிலோ ரூ.200வரை விற்கப்பட்டது. இல்லத்தரசிகள் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியைக் குறைந்த அளவே பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக கோயம்பேடு அங்காடிக்குத் தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருவதனால் தக்காளியின் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. இன்று சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடியில் தக்காளி விலை ரூ.5 குறைந்து, ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று ரூ.35-க்கு விற்கப்படுகிறது. மேலும் வெளி சந்தையில் உள்ள காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுவுமின்றி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் சரிய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.