சென்னை

ன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

தற்போது தமிழகத்தின் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.