டில்லி

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி கூட்டணியினர் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

நேற்று முன் தினம் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.  பிறகு அவை நடவடிக்கைகளைப் புறக்கணித்து விட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் கூடினர்.

இதைப் போல் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

சபாநாயகர் ஓம் பிர்லா மழைக்கால கூட்டத்தொடர் நிறைவையொட்டி, அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் அறிவித்தார். மொத்தம் 23 கட்சிகளைச் சேர்ந்த 142 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக அவர் கூறினார்.

மல்லிகார்ஜுன கார்கே,

”மத்திய அரசினர் விதிகளைச் சுட்டிக்காட்டி, அற்ப காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்குகிறார்கள். முன்பு இப்படி நடந்தது இல்லை.  மேலும் உரிமைக் குழுவுக்குப் பிரச்சினையை அனுப்புவதன் மூலம், அந்த நாடாளுமன்ற உறுப்பினர்., அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திலோ, நிலைக்குழு கூட்டங்களிலோ கலந்து கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர்.

எனவே இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராகத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராடுவோம்.”

என்று கூறினார்.