அட்டாக்

பாகிஸ்தான் முன்னாள் பிரதம்ர் இம்ரான்கானுக்குச் சிறையில் ‘சி’ வகுப்பு அறை ஒதுக்கப்பட்டதால்  அவர்  அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது.  புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார்.

இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக ‘தோஷகானா’ வழக்குப் பதிவு செய்யப்பட்டு இம்ரான்கானின் நாடாளுமன்ற உறுப்பினர். பதவி பறிபோனது  .அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் இம்ரான்கானைச் சந்திக்க அவருடைய வழக்கறிஞர்கள் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவரது முதன்மை வழக்குரைஞர் நயீம் ஹைதர் பன்ஜோதா அவரை நேரில் சந்தித்து பேசினார்.

பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பன்ஜோதா

“சிறையில் இம்ரான்கானுக்கு ‘சி’ வகுப்பு என்னும் சாதாரண அறையே ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னாள் பிரதமரை பயங்கரவாதிகளை நடத்துவது போல் நடத்துகிறார்கள். திறந்த கழிப்பிட வசதி கொண்ட அறையில் காற்று வசதி, வெளிச்சம் புகாத வண்ணம் அவரை அடைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்.

மேலும் பகலில் ஈக்களாலும், இரவில் கொசுக்கடியினாலும் இம்ரான்கான் அவதிப்படுகிறார். என்னை இங்கிருந்து அழைத்து செல்லுங்கள். இங்கே (சிறையில்) ஒருநொடி கூட இருக்க விரும்பவில்லை என இம்ரான்கான்  கூறினார். இதனால் அட்டாக் சிறையிலிருந்து  டிலா சிறைக்கு இம்ரான்கானை மாற்ற உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்”

எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.