சென்னை

ன்று தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

மக்கள் பெரிதளவில் ரயில்களில் பயணம் செய்வதை மிகவும் விரும்புகின்றனர்.  ரயில்கள் மூலம் விரைவாக மட்டுமின்றி நல்ல வசதிகளுடன் அதிக அளவில் பயணிகள் செல்ல முடிவதால் பலரும் இதை விரும்புகின்றனர்.  எனவே ரயில்களில் எப்போதுமே கூட்ட நெரிசல் உள்ளது.

எனவே ரயில்களில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுகிறது.  இன்று இந்த ரயில் பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.

இதைப் போல 5-ந்தேதி இரவு 7.10 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்குத் தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது.