டில்லி

ன்று இந்தியப் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திக்க உள்ளார்.

நேற்று இலங்கை அதிபர் ரணில்  விக்ரமசிங்கே 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.   அவர் நேற்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசி உள்ளார்.  இலங்கை – இந்தியா வெளியுறவுக் கொள்கை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அவர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார்.  அப்போது தமிழக மீனவர்கள் கைது, இலங்கையில் தமிழர்கள் நலன் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.