கொலம்பியா

சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் கொலம்பியாவில் 5 அரசியல்வாதிகள் உயிரிழந்துள்ளனர்.

சிறிய ரக விமானம் ஒன்று மத்திய கொலம்பியாவில் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி என 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அவர்கள் போயாகா துறையில் சான் லூயிஸ் டி காசினோ என்ற முனிசிபல் பகுதியில் சிறியரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்துள்ளது.

டிவிட்டரில் அக்கட்சி இதற்கு வருத்தம் தெரிவித்தது. விமானம் விலாவிசென்சியோவில் இருந்து பொகோடாவிற்கு கட்சி கூட்டத்திற்காகச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.  இடதுசாரி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.