கொல்கத்தா

ன்று காலை மேற்கு வங்கத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி உள்ளது.

கடந்த 8 ஆம் தேதி அன்று மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. மாநிலத்தில் பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் ஓட்டு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கிச் சூடு போன்ற நிகழ்வுகள் நடந்தன.

இந்த  ர்தலை முன்னிட்டு நடந்த வன்முறைக்கு 20 பேர் பலியாகி உள்ளனர்.  குறிப்பாக முர்ஷிதாபாத் நகரில் சில பகுதிகளில் வன்முறை பரவியதில் பலர் தாக்கப்பட்டு அதில் சிலர் காயமடைந்தும் உள்ளனர். இக்கு 3 வாக்கு இயந்திரங்கள் சாக்கடையில் வீசப்பட்டு அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் தேர்தல் வன்முறையின்போது, பல இடங்களில் வாக்கு பெட்டிகள் சூறையாடப்பட்டு உள்ளன. மாநிலத்தில் பல கிராமங்களில் எதிரெதிர் கட்சியினர் மீது வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. இந்த தேர்தல் தொடர்புடைய வன்முறையால், அரசியல் கட்சிகள் இடையே வாக்குவாதங்கள் அதிகரித்து ஒவ்வொரு கட்சியும் ஒன்றை ஒன்று தாக்கி பேசி வருகின்றன.

ஒவ்வொரு கட்சியும் இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு மற்ற கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றன. இ மேற்கு வங்கத்தின் புரூலியா, பிர்பும், ஜல்பைகுரி, நாடியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 697 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்த முடிவாகி நேற்று காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது.

இன்று காலை 8 மணிக்கு மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்துத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை  தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் கிராம பஞ்சாயத்துத் தேர்தலுக்கான வாக்குகளும், அதனைத் தொடர்ந்து ஜில்லா சமிதிகள் மற்றும் ஜில்லா பரிஷத்துகள் ஆகியவற்றின் வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.

அனைத்து வாக்கு மையங்களிலும், போதிய அளவுக்கு மத்திய படைகள் குவிக்கப்பட்டு, சி.சி.டி.வி. கேமிராக்கள் உதவியுடன் அவை கண்காணிக்கப்பட்டு வருகிறது.