டில்லி

ரும் 14 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் டில்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ஜாமீன் மனுவை விசாரிக்கிறது.

டில்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, ஐதராபாத் வணிகர் அபிஷேக் போய்ன்பலி, ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர் ஆகியோரின் மதுபான கொள்கை ஊழல் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரினர்,

இந்த மனுக்களை  டில்லி உயர்நீதிமன்றம் நீதிபதி தினேஷ்குமார் சர்மா விசாரித்தார். கடந்த 3-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜாமீன் வழங்க மறுத்துச் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியே என குறிப்பிட்டார்.

மேலும் மணிஷ் சிசோடியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. சாட்சிகளைக் கலைக்கச் சாத்தியக்கூறுகள் உள்ளதால் அவரது இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது .

கடந்த வாரம் மதுபான கொள்கை ஊழல் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குகளில் ஜாமீன் கோரி மணிஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தார். மேலும் மனீஷ் சிசோடியாவின் மனைவி 2-வது முறையாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆகவே இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்கக் கோரி மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி முன் வைத்த முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றது.  எனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஜூலை 14-ந் தேதி இந்த விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Delhi, SC, Manish Sidodia, bail petition, July 14, Enquiry,