திருப்பதி
தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டிருப்பதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் அப்போது உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள்.
மேலும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள் தற்போது தொடர் விடுமுறை காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பக்தர்கள் இலவச தரிசன வரிசையில் சுமார் 3 கிலோ மீட்டர் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel