ரோம்

ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் ஆண்டவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் கடந்த 7 ஆம் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அவரது உடல்நலம் வேகமாகத் தேறி வருவதாக மருத்துவக்ரள்ள் கூறினர்.

நேற்று அறுவைசிகிச்சை முடிந்த 9 நாட்களுக்குப் பிறகு நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகன் திரும்பினார்.

போப் ஆண்டவர் முன்பை விட தற்போது நலமுடன் உள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் செர்ஜியோ அல்ச்பீரி தெரிவித்துள்ளார்.