சிங்கப்பூர்

டைபெற உள்ள சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் தர்மன் போட்டியிட உள்ளார்.

உலகின் பல நாடுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.  குறிப்பாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது.  இதற்கு இணையாகச் சிங்கப்பூரிலும் இந்தியர்கள் அமைச்சர்களாக உள்ளனர்.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் சிங்கப்பூர் அதிபர் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் இங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.  தற்போதைய அதிபர் ஹலிமா யாகோப் தாம் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்து இருந்தார்.

எனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் தர்மன் சண்முகசுந்தரம் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.   மேலும் இதனால் தாம் தற்போது ஆளும் பிஏபி கட்சி மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.