சென்னை

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாநகர காவல்துறை  அறிவித்துள்ளது.

நாளை டெகாத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை என்னும் நிறுவனத்தின் சார்பாக “DECATHLON 10K RUN” ஓட்டம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 3 மணி முதல் காலை 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என மாநகரக் காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு:

அடையாறு மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர் டி.ஜி.ஸ்.தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எவ்வித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

அதே வேளையில் போர் நினைவிடத்திலிருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அனைத்து வாகனங்களும் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு – வாலாஜா பாயின்ட் – அண்ணாசாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

மேலும் ஆர்.கே.சாலையிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹைரோடு , லஸ் கார்னர், ஆர். கே. மட் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

தவிர  திரு.வி.க. பாலத்திலிருந்து 3வது அவன்யூ & 2வது அவன்யூ நோக்கி வரும் அனைத்து உள்வரும் வாகனங்களும் ML பார்க்- இடதுபுறம் திரும்பி- LB சாலை- சாஸ்திரி நகர் 1வது அவன்யூவில் திருப்பி விடப்படும்.

குறிப்பாகத் திரு.வி.க. பாலத்திலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் (எம்டிசி பேருந்துகள் உட்பட) எம் எல் பூங்காவில் திருப்பி விடப்பட்டு இடது எல்பி சாலை சாஸ்திரி நகர் 1வது அவன்யூ- சாஸ்திரி நகர் பேருந்து நிலையம் – 2வது அவன்யூ- 7வது அவன்யூ சந்திப்பு – வலது- எம்ஜி சாலை- எல்பி சாலை வழியாக அவர்களது இலக்கை அடையலாம்.