டெல்லி: அரசு உடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், வரும் 30, 31ம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக் கப்படுவரதாக,  அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு  அறிவித்து உள்ளது.

ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கம் வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்தப்படும் என வங்கிகள் அறிவித்து இருந்தது. அதன்படி, இந்திய வங்கிகள் சங்கம் சார்பில் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சனி, ஞாயிறு உள்பட 4 நாட்கள் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து மத்திய தொழிலாளர் நலத்துறை, வங்கி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், தங்களது போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.  ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொள்வதாகவும் உறுதி அளித்ததாகவும், இதனையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் வங்கி தொழிற்சங்களின் ஐக்கிய மன்றம் (யுஎஃப்பியு) இடையேயான பேச்சுவார்த்தை மத்திய துணை தலைமை தொழிலாளர் ஆணையர் முன்பு நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் வங்கியின் 5 நாட்கள் வேலை நாட்கள்,ஓய்வூதியம் புதுப்பித்தல், எஞ்சிய பிரச்சினைகள், தேசிய ஓய்வூதிய முறையை ரத்து செய்தல், ஊதிய உயர்வு கோரிக்கைகள் மீதான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குதல், போதுமான ஆட்சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த பேச்சுவார்த்தை சுமுகமான முடிந்ததாக கூறப்படுகிறது.  அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 31ந்தேதி நடைபெற உள்ளது .எனவே, அறிவிக்கப்பட்டிருந்த, ஜனவரி 30,31 ஆகிய தேதிகளின் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, யுஎஃப்பியூ தலைவர் சுனில் மிட்டல் கூறுகையில், வங்கி தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு நிர்வாகம் ஏற்று கொண்டுள்ளதாகவும், இதுவரை ஆதரவளித்த அனைத்து வங்கியாளர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், வங்கி ஊழியர்கள் மேலும் போராட்டத்திற்கு தயாரக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 31ஆம் தேதி நடத்தவும் இந்திய வங்கிகள் சங்கம் யுஎஃப்ஃபியுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அனைத்து வங்கிகளிடமிருந்தும் ஊதிய திருத்தத்திற்கு தேவையான அங்கீகார கடிதங்களை பெறுவது மற்றும் ஐந்து நாள் வங்கி வாரம் பிரச்சினையில் கொள்கை ரீதியான புரிதலின்படி ஒரு மாதத்திற்குள் இறுதி உத்தரவுகளை வெளியிடுவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது. இதற்கிடையில், இந்த சாதகமான பேச்சுவார்த்தைக்கு வங்கி ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.