சென்னை: “40ம் நமதே நாடும் நமதே” என்ற இலக்கு நோக்கி உழைக்க வேண்டும்  என 23 திமுக அணி நிர்வாகிகளிடையேயும் திமுக தலைவரும், முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில், இன்று (28-12-2022) தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்  நடைபெற்றது.

இந்தி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  ‘திமுகவின் 23 அணிகளும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் “40ம் நமதே நாடும் நமதே” என்ற இலக்கு நோக்கி உழைக்க வேண்டும். திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று மக்கள்பணி ஆற்றிட வேண்டும்’  என வலியுறுத்தியதுடன், சமத்துவம் – சமூகநீதி – பகுத்தறிவு வாயிலாக முற்போக்கான சமுதாயத்தைக் கட்டமைக்கும் நமது கடமையை நிறைவேற்றிட; சாதி – மத ஏற்றத்தாழ்வுகளை வலிமைப்படுத்தி ஆதிக்கத்தை நிறுவத் துடிக்கும் பிற்போக்குச் சக்திகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காத்திட நமது வலிமைமிகு படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும் என கூறினார்.