ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் இன்று ஒரேநாளில் 7 பயங்கரவாதிகள் காஷ்மீர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாகிஸ்தானியர்கள் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலும், அதை பாதுகாப்பு படையினர் வேட்டையாடுவதும் அதிகரித்து வருகிறது. நேற்று இரவு, பாகிஸ்தானிலிருந்து வந்த லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவர்  சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று அதிகாலை ஒருவர் துப்பாக்கி முனையில் பிடிபட்டதாகவும், அவரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாகவும் ஜம்மு – காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடபாக ஜம்மு – காஷ்மீர் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நேற்று முதல் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஷோப்பியான் பகுதியில் உள்ளூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோன்று புல்வாமா பகுதியில் லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். குல்காம் பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்பட்டிருந்த லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவரை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் கொல்லப்பட்டனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.