தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் சாலை வழியாக வந்த 3 பயணிகளுக்கு பாதிப்பு.

சென்னையில் 127, செங்கல்பட்டில் 44, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 14, திருநெல்வேலியில் 6, தூத்துக்குடி மற்றும் திருச்சியில் தலா 5, ராணிப்பேட்டை, மதுரை மற்றும் கன்னியாகுமரியில் தலா 4, சேலத்தில் 2 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தென்காசி, திருவாரூர், திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய 7 மாவட்டத்தில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த தலா ஒரு பயணிக்கும் கேரள மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

இன்று மொத்தம் 12,036 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 130 ஆண்கள் 125 பெண்கள் என மொத்தம் 255 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

134 பேர் இன்று குணமடைந்த நிலையில் 1453 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.