தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 111, செங்கல்பட்டில் 33 திருவள்ளூரில் 14 மற்றும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 12, கன்னியாகுமரியில் 6, மதுரை மற்றும் திருச்சியில் தலா 5 பேருக்கும் ஈரோடு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் தலா 2 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல், சேலம், நீலகிரி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர கேரள மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

இன்று மொத்தம் 13,891 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 110 ஆண்கள் 107 பெண்கள் என மொத்தம் 217 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

145 பேர் இன்று குணமடைந்த நிலையில் 1231 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.